
புதுடெல்லி: கடந்த மார்ச் மாதம் புனேயில் ஓலா நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 1,441 ஓலா இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சமீபமாக மின்சார இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தபடி உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தங்கள் நிறுவன வாகனங்களைத் திரும்பப் பெற்று பரிசோதித்து வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment