
புதுடெல்லி: ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) பொதுப் பங்கு மே 4-ம் தேதி வெளியாகிறது. மே 9-ம் வரை பங்குகளில் முதலீடு செய்யலாம். இதற்கான விலை ரூ. 902 முதல் ரூ. 949 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாலிசிதாரர்களுக்கு ரூ.60 விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு ரூ.45 விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் அரசு 3.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 21,000 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஐசியின் நிகர மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment