
புது டெல்லி: ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான அலுவலக வாடகை மதிப்பில் இந்தியாவில் உள்ள பெங்களூரு நகரம் முதலிடத்தில் உள்ளது. இது நடப்பு ஆண்டுக்கான முதல் காலாண்டு தகவலாகும். இது அபாரமான வளர்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நைட் ஃபிராங்க் கன்சல்டன்சி நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பிரைம் அலுவலக வாடகை தொடர்பான காலாண்டு அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. மொத்தம் 23 நகரங்கள் இதற்காக கண்காணிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 2022 ஜனவரி முதல் மார்ச் வரையில் சுமார் 5.8 சதவீதம் பெங்களுருவில் வாடகை மதிப்பு வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment