
புதுடெல்லி: நடந்து முடிந்த 2021-22-ம் நிதி ஆண்டில் வரி வசூல் உச்சம் தொட்டுள்ளது. நேரடி மற்றும் மறைமுக வரிகள் சேர்த்து மொத்தமாக ரூ.27.07லட்சம் கோடி வரி வசூலாகியுள்ளது. இது பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட ரூ.5 லட்சம் கோடி அளவில் அதிகம்.
வருமான வரி மற்றும் நிறுவனவரி போன்ற நேரடி வரிகளின் வசூல்ரூ.14.10 லட்சம் கோடியாக உள்ளது.இது பட்ஜெட் இலக்கைவிட ரூ.3.02 லட்சம் கோடி அதிகம். மறைமுக வரிகளின் வசூல் ரூ.12.90 லட்சம் கோடியாக உள்ளது. இது பட்ஜெட் இலக்கை விட ரூ.1.88 லட்சம் கோடி அதிகம். 2020-21-ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் நேரடி வரிகள் 49 சதவீதம் அளவிலும், மறைமுக வரிகள் 30 சதவீதம் அளவிலும் அதிகரித்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment