
திருப்பூர்: மூலப்பொருட்கள் விலை உயர்வுகாரணமாக திருப்பூர் மாவட்டம்அனுப்பர்பாளையம் மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட சிறு, குறு பாத்திர உற்பத்தி பட்டறைகள் மூடப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அனுப்பர்பாளையம், அங்கேரிபாளையம், செட்டிபாளையம், ஆத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட எவர்சில்வர், செம்பு, பித்தளை உலோகங்களைக் கொண்டு பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிலை நம்பி ஜாப் ஆர்டர் செய்வோர் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment