
புதுடெல்லி: கரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு நடுவிலும் நாட்டின் வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ.3.79 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
இது இதற்கு முன் இல்லாத அதிக அளவாகும். மேலும் இது 20 சதவீத உயர்வு ஆகும். அதிக அளவாக அரிசி ஏற்றுமதி ரூ.73 ஆயிரம் கோடியைத் தாண்டி உள்ளது. இதுபோல கோதுமை ஏற்றுமதி ரூ.16,625 கோடியாகவும், சர்க்கரை ரூ.34,922 கோடியாகவும், கடல் பொருட்கள் ரூ.58,532 கோடியாகவும் அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக கோதுமை ஏற்றுமதி 2020-21 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment