
கரோனா தொற்று காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு சொல்லியிருந்தது. இந்தச் சூழலில் தற்போது ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் திரும்புமாறு அந்நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இதனை கூகுள் மாதிரியான உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் முன்னெடுத்துள்ளன. இத்தகைய நிலையில் மீண்டும் அலுவலகம் திரும்ப ஊழியர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் இலவசமாக இ-ஸ்கூட்டர்களை வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போதைக்கு இந்தத் திட்டம் அமெரிக்க நாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இ-ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனத்துடன் கூகுள் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment