
மும்பை: மும்பை பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் தொடங்கிய போதிலும் வர்த்தக நேரத்தின் போது சரிவைச் சந்தித்தது. சென்செக்ஸ் 108 புள்ளிகள் சரிந்து 61,642 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 26 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 18,317 ஆக இருந்தது.
வியாழக்கிழமை பங்குச்சந்தை 230 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை சந்தையில் சென்செக்ஸ் 50 புள்ளிகள் உயர்வுடன் ஏற்றத்துடனேயே தொடங்கியது. காலை 09:55 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 108.52 புள்ளிகள் சரிவுடன் 61,642.08 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் 26.35 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,317.55 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment