
புதுடெல்லி: வரும் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கவுள்ளன. அதன் முதல்கட்டமாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் துறை அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக அவர், மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதி அமைச்சர்களை டெல்லியில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநில நிதியமைச்சர்கள் பட்ஜெட் தயாரிப்புக்கான தங்களது ஆலோசனைகளையும், கருத்துகளையும் நிர்மலா சீதாராமனிடம் விளக்கிக் கூறினர். மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, பகவத் கரத், தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், மாநில நிதித் துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த செயலர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment