
புதுடெல்லி: உலகம் மந்தநிலையை நோக்கி நகர்ந்து வரும் சூழ்நிலையில், இந்தியா அடுத்த நிதியாண்டில் 6-7 சதவீத பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்கும் என நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் ராஜீவ் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது.
அதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. சர்வதேச நிலவரங்களால் நமது வளர்ச்சி எதிர்மறையாக பாதிக்கப்படலாம். எப்படி இருந்தாலும், 2023-24-ம் நிதியாண்டில் நமது பொருளாதாரம் 6 முதல் 7 சதவீதம் வரையிலான வளர்ச்சியை தக்க வைக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment