
சென்னை: வருமான வரி தாக்கல் செய்வதற்காக ஒரே படிவம் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக தற்போது பல்வேறு படிவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை ஒருங்கிணைத்து ஒரே படிவம் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாதிரி ஒருங்கிணைந்த படிவத்தை வருமான வரித் துறை, கடந்த 1-ம் தேதி வெளியிட்டு மக்களிடம் கருத்து கேட்டுள்ளது.
இதில், ஐடிஆர்-7 படிவத்தைத் தவிர இதர படிவங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. ஐடிஆர்-1 மற்றும் 4 படிவங்கள் ஏற்கெனவே எளிமைப்படுத்தப்பட்டு உள்ளதால், அவை அப்படியே தொடரப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment