
புதுடெல்லி: வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 30 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு ப்ரீபெய்டு ரீசார்ஜ் ப்ளானாவது இருக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தெரிவித்துள்ளது.
தற்போது பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கு ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள் அதிகபட்சமாக 28 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே உள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 13 முறை தங்களின் செல்ஃபோன் எண்ணை ரீசார்ஜ் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
இந்நிலையில், வவுச்சர், சிறப்பு டாரிஃப் வவுச்சர் மற்றும் காம்போ வவுச்சர் ஆகியவற்றில் தலா ஒரு திட்டத்தின் வேலிடிட்டியாவது 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என ட்ராய் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் ஓராண்டுக்கு மேற்கொள்ளும் ப்ரீபெய்டு ரீசார்ஜ்களின் எண்ணிக்கை 12 ஆகக் குறையும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment