
புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட உள்ள பொருளாதார ஆய்வறிக்கை இம்முறை ஒரே ஒரு தொகுதி (வால்யூம்) கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. வரும் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9% அளவுக்கு இருக்கும் என்று ஆய்வறிக்கையில் குறிப் பிடப்படலாம் என தெரிகிறது.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பு நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இதை தயார் செய்யும் பணியில் முதன்மை பொருளாதார ஆலோசகர் ஈடுபட்டுள்ளார். வழக்கமாக தலைமைப் பொருளாதார ஆலோசகர்தான் (சிஇஏ) நிதி அமைச்சக அதிகாரிகளுடன் இணைந்து பொருளாதார ஆய்வறிக்கை தயாரிப்பில் ஈடுபடுவார். அப்பதவி காலியாக உள்ளதால் முதன்மை பொருளாதார ஆலோசகர் இப்பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment