
புதுடெல்லி: இந்தியா 2027-ல் பொருளாதார ரீதியாக 3-வது பெரிய நாடாக உருவாகும் என்று அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருளாதாரக் கொள்கைகள், மக்கள் தொகை எண்ணிக்கை, டிஜிட்டல் கட்டமைப்பு ஆகியவை இந்தியாவை பொருளாதார ரீதியாக 3-வது பெரிய நாடாக மாற்றும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அந்நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் 2030-ல் இந்தியா 3-வது பெரிய நாடாக மாறும் என்று குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வளர்ச்சியை 2027-ம் ஆண்டிலேயே இந்தியா எட்டும் என்று புதிய கணிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment