
சென்னை: மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப் பத்திரங்கள் மூலம் அதிக லாபம் கிடைப்பதுடன், 100 சதவீதம் பாதுகாப்பானது என்பதால் இதில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அழகு, சேமிப்பு, முதலீடு என பல்வேறு காரணங்களுக்காக மக்கள் விரும்பி வாங்கும் பொருள் தங்கம். சிலர் நகையாக வாங்கி அணிகின்றனர். சிலர் முதலீட்டு நோக்கில் தங்கக் கட்டிகள், தங்கக் காசுகளாக வாங்கி சேமிக்கின்றனர். கல்வி, மருத்துவம், திருமணம் என அவசர காலங்களில் கைகொடுக்கும் என்பதால், விலை போலவே தங்கத்தின் மவுசும் கூடிக்கொண்டே போகிறது. நாளுக்குநாள் தேவை அதிகரிப்பதால், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், அந்நியச் செலாவணி குறைந்து, இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment