
பெங்களூரு: பிரபல வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் இருசக்கர வாகன சேவைகளைத் தரும் ஓலா நாட்டின் 75-வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று தனது மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. செப்டம்பர் 8-ம் தேதி முதல் அதிகாரபூர்வ விற்பனை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஓலா மின்சார ஸ்கூட்டரை பலரும் முன்பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.
ஓலா எஸ் 1 (S1) மற்றும் எஸ் 1 ப்ரோ (S1 Pro) என்ற இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்ய்பட்டன. 10 நிறங்களில் விற்பனைக்கு வரும் இந்த ஸ்கூட்டர்களில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் குரல் அடையாளம் கண்டு பதில் சொல்லுதல், தொடு திரை, சாவியின்றி பூட்டும் ப்ராக்ஸிமிடி லாக் வசதி, வாகனம் களவு போகாமல் தடுக்க எச்சரிக்கை செய்யும் வசதி உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment