
முதலீடுகளை எடுத்துக் கொண்டால் ஒரே திட்டத்தில் முழு முதலீடையும் மேற்கொள்ளாமல் பல திட்டங்களில் பிரித்து முதலீடு செய்யும் பாரம்பரிய முறையே புத்திசாலித்தனமானதாக இருக்கும். காளையின் பாய்ச்சல் அதிகமாக உள்ள இப்போதைய சூழலில் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பங்குச் சந்தையில் மட்டுமே முதலீடு செய்வது சரியான உத்தியாக இருக்காது.
உங்களை அதைரியப்படுத்தும் நோக்கத்தில் கூறும் ஆலோசனையாக இதை நிச்சயம் நினைக்க வேண்டாம். பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்க சூழலால் ஏற்படும் அபாயத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதுதான் நோக்கமாகும்.
உங்களது முதலீடுகளை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யும்போது அவை ஒவ்வொன்றும் மாறும் சூழலுக்கு ஏற்ப செயல்படும் தன்மை கொண்டவையாக இருக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment