
சென்னை: ஆப்பிள் நிறுவனத்துக்குத் தேவையான ஐபோன் மொபைல் போன்களை உற்பத்தி செய்து வழங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையில் வரும் 12-ம் தேதி முதல் 500 தொழிலாளர்களுடன் உற்பத்தியைத் தொடங்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
17 ஆயிரம் ஊழியர்களுடன் ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் ஐபோன் மொபைல் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி அங்கு பணியாற்றிய ஊழியர்களில் 250 பேர் தாங்கள் சாப்பிட்ட உணவால் உடல்நலக் குறைவுக்கு ஆளாகினர். இதையடுத்து, ஊழியர்கள் நடத்திய போராட்டத்தால் நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment