
சமீபத்தில் ‘புல்லி பாய்’ என்ற செயலி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் முஸ்லீம் பெண் பத்திரிகையாளர்கள், களச் செயல்பாட்டாளர்கள் உட்பட பல முஸ்லீம் பெண்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, அந்தப் பெண்கள் விற்பனைக்கு என்று அறிவிக்கப் பட்டு இருந்தது. அந்தச் செயலிக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்தச் செயலியை உருவாக்கி, நிர்வகித்தது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மிக அதிர்ச்சிகரமான விஷயம், அவர்களில் மூவர் கல்லூரி மாணவர்கள். ஒருவர் 19 வயது பெண். வேறெந்த நாட்டைவிடவும், இந்தியாவில் சமூக வலைதளங்கள் வெறுப்பைப் பரப்பும் தளமாக பயன்படுத்தப்படுகிறது என்று சமீபத்திய நிலவரங்கள் உணர்த்துகின்றன.
இன்றைய காலத்தில் ஒவ்வொரு தனி மனிதன் வாழ்விலும் சமூக வலைதளங்கள் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. தனிநபர் மட்டுமல்லாமல் சிறு நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வாடிக்கையாளரை சென்று சேர சமூக வலைதளங்களை பெரிதும் நம்புகின்றன. சமூக வலைதளங்கள் இணைப்புப் பாலமாக செயல்படுகின்றன. அதே சமயம் அவை, சக மனிதர்களுடனான தொடர்பை ஏற்படுத்தும் தளமாக, கருத்துகளை பகிரும் தளமாக, செய்திகளைப் பகிரும் தளமாக மட்டும் இல்லை. வெறுப்பைப் பரப்பும் தளமாகவும் அது இருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment