
நீங்கள் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு அதற்கான பணத்தை எப்படி செலுத்துகிறீர்கள்? பணமாகவா அல்லது போன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற மொபைல்போன் செயலிகளின் வழியாகவா? ஸ்மார்ட்போன், இணையம் சார்ந்து புழங்கிக்கொண்டிருக்கும் நபர் என்றால் பெரும்பான்மையான நேரங்களில் நீங்கள் இத்தகைய செயலிகளின் வழியே பரிவர்த்தனை செய்பவராக இருக்கக்கூடும்.
போன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற பணப் பரிவர்த்தனை செயலிகள் மூன்று வருடங்களுக்கு முன்பு டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகம் புழக்கத்தில் இருந்தன. ஆனால் தற்போது கிராமங்கள் வரையில் இச்செயலிகள் பரவியுள்ளன. பெட்டிக்கடை, தெருவோரக் கடைகளில் இச்செயலிகள் மூலம் பணம் செலுத்துவதற்கான க்யூஆர் கோட் (QR Code) அட்டையை பார்க்க முடியும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment