
புதுடெல்லி: கரோனா தொற்றினால் ஏற்பட்டபாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை காக்கும் வகையில் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் (2021-22) முதல் 9 மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 30 ஆயிரம் கோடி டாலரை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் எட்டியதைவிட 22 சதவீதம் அதிகமாகும். நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தபோதிலும் ஒட்டுமொத்தமாக ஏற்றுமதி அதிகரித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 40,000 கோடி டாலர் என ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை எளிதில் எட்டிவிட முடியும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment