
தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) தலைவர் ஜெ.செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "விவசாயத்துக்கு அடுத்தபடியாக கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்கும் நூற்பாலைத் தொழிலின் இன்றைய நிலை மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு, மூலப்பொருளான பஞ்சின் விலை அபரிமிதமாக அதிகரித்து வருவதே காரணம். உலகிலேயே தரமான பஞ்சு உற்பத்தி செய்வதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்றுக்குப் பின் நூற்பாலைகள் சீராக மீண்டும் திறக்கப்பட்டு, பஞ்சு தேவை அதிகரித்து வந்தது. இந்நிலையில், பஞ்சின் சராசரி விலை 2020-ம் ஆண்டு செப்டம்பரில் கண்டிக்கு (355 கிலோ) ரூ.37 ஆயிரமாக அதிகரித்தது. புதிய பருத்தி பருவ காலம் தொடங்கிய 2021-ம் ஆண்டு அக்டோபரில், அதன் விலை ரூ.60 ஆயிரமாக அதிகரித்தது. தற்போது, ரூ.80 ஆயிரமாக உள்ளது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பஞ்சுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இதுபோன்று பஞ்சின் விலை உயரும்போது, நூல் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் ஜவுளித்தொழில் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எம்சிஎக்ஸ், என்டிசிஇஎக்ஸ் ஆகிய பெரிய வர்த்தகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், பஞ்சின் விலை உயர்ந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment