
குறு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் குறு நிறுவன குழும மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும். அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் பாத்திரங்கள் செய்யும் குழுமம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நரிக்குறவர் செய்யும் செயற்கை நகைகள் குழுமம், கடலூர் மாவட்டத்தில் முந்திரி பதப்படுத்தும் குழுமம், மதுரையில் பொம்மை செய்யும் குழுமம் ஆகியவற்றை அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்படுகிறது. கயிறு உற்பத்தி தொழிலை மேம்படுத்த கோவையில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் ரூ.5 கோடியில் அமைக்கப்படுகிறது.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மூலதன மானியமாக ரூ.300 கோடியும், கடன் உத்தரவாத திட்டத்துக்கு ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்துறைக்கு மொத்தம் ரூ.911.50 கோடி ஒதுக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment