
சென்னை: இந்தியப் பொருளாதாரம் மீண்டு எழத் தொடங்கி உள்ளது. நீடித்த நிலையான வளர்ச்சிக்கான காலம் தொடங்கி விட்டது. இதற்கான அறிகுறிகள் பரவலாகத் தெரிகின்றன. உக்ரைன் போர் பின்னணி, அந்நிய முதலீடுகளின் வரவு, உள்நாட்டு நிலவரம் ஆகிய மூன்று பிரிவுகளில் இது அடங்கும்.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலால் உலக நாடுகள் பல இன்னலுக்கு உள்ளாகும். ஏற்கெனவே ஏராளமான உயிரிழப்புகளை, லட்சக்கணக்கான அகதிகளை ஏற்படுத்தியுள்ள இப்போரால் உலகப் பொருளாதாரம் பெரிய சவாலைச் சந்திக்க வேண்டி வரும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment