
புதுடெல்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில் மற்றும் வர்த்தகம் தொடர்பான போட்டிச் சட்ட விதிகளை மீறியதாக 241 நிறுவனங்கள் மீது ரூ.4,370 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்த அபராதத் தொகையில் ரூ.198 கோடி மட்டுமே இதுவரையில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
ஒரு நிறுவனம் வேறு நிறுவனங்களை வளரவிடாமல் ஏகாபத்தியமாக செயல்படுவதை தடுக்கும் நோக்கில் ‘போட்டிச் சட்டம் 2002’ கொண்டு வரப்பட்டது. நிறுவனங்கள் இந்தச் சட்ட விதிகளை பின்பற்றுகின்றனவா என்பதை இந்திய போட்டி ஆணையம் கண்காணிக்கிறது. இந்த அமைப்பு கடந்த 5 ஆண்டுகளில், சட்ட விதிகளை மீறியதாக 241 நிறுவனங்களுக்கு ரூ.4,370 கோடி அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment