
பண்டல் செய்யப்பட்ட அரிசி மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால், சாமானிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கோவை, திருப்பூர் மாவட்ட அரிசி வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அரிசி ஆலைகள் நிறைந்த பகுதி காங்கயம். அதேபோல ஊத்துக்குளி, அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அரிசி ஆலைகள் உள்ளன. பல்வேறு பகுதிகளில் மொத்த அரிசி விற்பனை மண்டிகளும் செயல்படுகின்றன. இந்நிலையில், கடந்த மாதம் சண்டிகர் நகரில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி விதித்து அறிவிக்கப்பட்டது. இதுவரை ரிஜிஸ்டர்டு பிராண்டுகளுக்கு மட்டுமே 5 சதவீத ஜி.எஸ்.டி. இருந்த நிலையில், தற்போது பண்டல் பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி, கோதுமை தானியங்களுக்கும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டால், ஒரு கிலோ அரிசி ரூ.3 வரை விலை உயரக்கூடும். ரூ.1000-க்கு விற்கும் 25 கிலோ அரிசி ரூ.1050 ஆக விலை உயரும் என அரிசி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கூடுதல் விலை உயர்வால், நடுத்தர குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment