
புதுடெல்லி: வருமான வரியை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்படாது என வருமான வரித்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள ஒவ்வொரு பணியாளரும், நிறுவனமும் தங்களுக்கான வரிக் கணக்கை ஆண்டுதோறும் தாக்கல் செய்ய வேண்டும். 2021-22 நிதியாண்டு அல்லது 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இம்மாதம் 31 ஆகும். வருமான வரிகாலக்கெடுவைத் தவறவிட்டால், தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணம் மற்றும் வரிப் பொறுப்புக்கு விதிக்கப்படும் வட்டி என அதிக அபராதம் விதிக்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment