
மும்பை: மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள 4 கூட்டுறவு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு வங்கிகளில் வைப்புத் தொகைக்கு அதிக வட்டி கிடைப்பதால், கிராமப்புற விவசாயிகள், சிறு, குறு வணிகர்கள் கூட்டுறவு வங்கிகளில் தங்கள் பணத்தை சேமிக்கின்றனர். ஆனால் அங்கு அவ்வப்போது நடந்து வரும் மோசடிகளால், கூட்டுறவு வங்கிகள் மீதான நம்பிக்கை கேள்விக்குறியாக மாறிவருகிறது. கடந்த 5 நிதியாண்டுகளில் மட்டும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் ரூ.220 கோடி முறைகேடு நடைபெற்று இருக்கிறது. அதுதொடர்பாக, 1,000 வழக்குகள் பதிவாகியுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment