
மும்பை: உத்தராகண்ட் மாநிலத்தில் 10,500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மானா எனும் மலைக் கிராமம். இந்தியா - திபெத் எல்லையில் அமைந்திருக்கும் இந்தக் கிராமம் இந்தியாவின் கடைசிக் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் கடைசி மூலைவரையிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைக் கட்டமைப்பான யுபிஐ சென்று சேர்ந்து இருக்கிறது. இந்நிலையில் இக்கிராமத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் யுபிஐ க்யூஆர் கோர்டு அட்டை வைக்கப்பட்டிருப்பதைப் புகைப்படம் எடுத்து ‘இந்தியாவின் கடைசி டீக்கடை’ என்று ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தன் ட்விட்டர் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பின் வளர்ச்சியைப் பாராட்டியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment