
திருப்பூரில் பின்னலாடைதொழிலில் அட்டைப்பெட்டி முக்கியபங்காற்றுகிறது. இங்கு தயாரிக்கப்படும் புதிய ஆடைகளை அட்டைப்பெட்டிகளில் அடைத்து, வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்புவது வழக்கம்.
வெளிநாட்டில் இருந்து வரும் கழிவுக் காகிதம் வரி, கெமிக்கல் விலை உயர்வு, கப்பலில் வரும் கன்டெய்னர் வாடகை உயர்வுபோன்ற பல்வேறு காரணங்களால் கிராப்ட் காகிதத்தின் விலை உயர்ந்து வருகிறது. கிராப்ட் காகிதத்தின்விலை டன்னுக்கு ரூ.42,000 ஆகவும்,உயர்ரக காகிதத்தின் விலை டன்னுக்கு ரூ.52,000 ஆகவும் இருந்தது.கடந்த பிப்ரவரி மாதம் மட்டும், இதன் விலையை 3 முறை தலா ரூ.2,000 வீதம் ரூ.6,000 வரை உயர்த்தி காகித உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment