
சென்னை: பாரத் ஆல்ட் ப்யூல் நிறுவனம் இருசக்கர மின் வாகன தயாரிப்புக்காக கிருஷ்ணகிரியில் ரூ.250 கோடி முதலீட்டில் ஆலை அமைக்க உள்ளது. இதுதொடர்பாக இந்நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
40 ஆயிரம் சதுர மீட்டர்கள் பரப்பளவில் ஆண்டுக்கு 1 லட்சம் இருசக்கர மின் வாகனங்களைத் தயாரிக்கும் வகையில் இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது. மின் வாகனங்களுக்குத் தேவையான பேட்டரிகளும் மோட்டார்களும் இந்த ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது. 2023 முதல் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் என்றும் இந்த ஆலை மூலம் 3000 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment