
புதுடெல்லி: 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்க அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி டேட்டா நெட்வொர்க்ஸ், ரிலைன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியநிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்த விவரங்களை தொலைத்தொடர்புத் துறை நேற்று பட்டியலிட்டுள்ளது.
இம்மாதம் 26-ம் தேதி 5-ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெற உள்ளது. அலைக்கற்றைக்கான லைசென்ஸ் பெறுவதற்கு நிறுவனங்களிடையே கடுமையான போட்டி இருக்கும் என்று தெரிகிறது. தங்களது நிலையை தக்கவைத்துக்கொள்ள ஒரே அலைவரிசையைப் பெறுவதில் நிறுவனங்கள் கடுமையாக போட்டியிடும் எனத் தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment