
துபாய்: உலக கோடீஸ்வரர்கள் பட்டி யலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் எலான் மஸ்கிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளார். இந்த நிலையில், அவரது மூத்த சகோதரர் வினோத் சாந்திலால் அதானியும் தற்போது அதிக சொத்து மதிப்பைக் கொண்ட வெளிநாடுவாழ் இந்தியராக (என்ஆர்ஐ) உருவெடுத்துள்ளார். இவர் நாளொன்றுக்கு ரூ.102 கோடி வருவாயை ஈட்டி வருகிறார்.
துபாயில் குடியிருந்து வரும் வினோத் அதானி, சிங்கப்பூர், ஜகர்த்தா, துபாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வர்த்தகம் செய்து வருகிறார். கடந்த ஓராண்டில் இவரது சொத்து மதிப்பு 28 சதவீதம் அதிகரித்து ரூ.37,400 கோடியை எட்டியுள்ளது என ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா கோடீஸ்வரர் பட்டியல் 2022-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment