
பெங்களூரு: போட்டி நிறுவனங்களில் ரகசியமாக பணி செய்து வந்த 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது விப்ரோ நிறுவனம். இதனை அந்நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ரிஷத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமாக விப்ரோ உள்ளது. கடந்த 1945 வாக்கில் நிறுவப்பட்டது. கடந்த 1970 மற்றும் 80-களின் வாக்கில் ஐடி துறையில் கவனம் செலுத்த தொடங்கியது விப்ரோ. சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment