
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (திங்கள்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 138 புள்ளிகள் உயர்வடைந்து 63,522 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி42 புள்ளிகள் உயர்ந்து 18,869 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் அதன் உச்சபட்ச ஏற்றத்துக்கு மிக நெருக்கமாக தொடங்கின.என்றாலும் வர்த்தகத்தின் போது சரிவில் பயணிக்கத் தொடங்கியது. காலை 10:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 11.81 புள்ளிகள் சரிவடைந்து 63,372.77 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 13.50 புள்ளிகள் சரிந்து 18,812.50 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment