
புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இதுவரை நிகர நேரடி வரி வசூல் 11 சதவீதம் அதிகரித்து ரூ.3.80 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
2023-24 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஜூன் 17-ம் தேதி நிலவரப்படியான முன்கூட்டிய வரி வசூல் ரூ.1,16,776 கோடியை தொட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட 13.70 சதவீதம் அதிகமாகும். இதே காலகட்டத்தில் நிகர நேரடி வரி வசூல் ரூ.3,79,760 கோடியாக இருந்தது. இதில், நிறுவனங்கள் செலுத்திய வரி (சிஐடி) ரூ.1,56,949 கோடியும், தனிநபர் வருமான வரி (பங்கு பரிவர்த்தனை வரி-எஸ்டிடி உட்பட) ரூ. 2,22,196 கோடியும் அடங்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment