
பெங்களூரு: ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை விநியோகித்து வரும் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம் 2,000 ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவிக்கும் மக்களுக்கு இது நிச்சயம் உதவும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி, ரூ.2000 கரன்சி நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தது. அதனால் கடந்த மே 23 முதல் வரும் செப்.30-ம் தேதி வரையில் பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. நாளொன்றுக்கு ரூ.20,000 மதிப்பிலான நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment