
கோவை: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) சார்பில், மின்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மின் கட்டண உயர்வால் தமிழ்நாட்டில் உள்ள குறுந் தொழில் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. மாதாந்திர நிலைக் கட்டணம் 112 கிலோ வாட் வரை ரூ.35-ஆக இருந்த நிலையில் 112 கிலோ வாட்டை இரண்டாக பிரித்து 50 கிலோ வாட் வரை ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.75, 51-ல் இருந்து 112 வரை ரூ.150 என உயர்த்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment