
புதுடெல்லி: மனிதாபிமான அடிப்படையில் உணவு தட்டுப்பாட்டில் அவதிப்படும் நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் இதுவரை 18 லட்சம் டன் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை மத்திய உணவுத்துறை செயலர் சுதன்ஷு பாண்டே தெரிவித்துள்ளார். மே 13-ம் தேதி வரை 18 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment