
புதுடெல்லி: கரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில் இந்தியாவிடமிருந்து மிக அதிக அளவில் அரிசியை சீனா இறக்குமதி செய்துள்ளது. மொத்தம் 16.34 லட்சம் டன் அரிசியை சீனா இறக்குமதி செய்துள்ளது. இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த அரிசியின் மொத்த அளவில் இது 7.7 சதவீதமாகும். இந்தியா மொத்தம் 212 லட்சம் டன் அரிசியை கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி செய்துள்ளது.
சீனா இறக்குமதி செய்த அரிசியில் 97 சதவீதம் அதாவது 15 லட்சம் டன் பாதி உடைத்த அரிசியாகும். பாதி உடைத்த அரிசிக்கான தேவை அதிகரித்ததால் இந்தியாவிடமிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment