
புதுடெல்லி: டெல்லி விக்யான் பவனில் ‘தொழில் முனைவு இந்தியா’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) வளர்ச்சிக்காக ‘எம்எஸ்எம்இ துறையின் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்தல்’, ‘எம்எஸ்எம்இ துறையில் முதல் முறையாக ஏற்றுமதியில் ஈடுபடுபவர்களை மேம்படுத்துதல்’ என்ற இரண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதில் ‘எம்எஸ்எம்இ துறையின் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்தல்’ திட்டத்துக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.6,000 கோடி செலவிடப்பட உள்ளது. இந்தத் திட்டம் உலக வங்கியுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment