
சென்னை: தணிக்கைத் துறையில் உருவாகிவரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஒரு நாள் தேசிய மாநாடு சென்னை தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் நாளை நடைபெற உள்ளது. இம்மாநாட்டை இந்திய உள் தணிக்கையாளர்கள் அமைப்பின் (Institute of Internal Auditors India - IIA) மகளிர் பிரிவு நடத்துகிறது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து அனுபவமிக்க தணிக்கையாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மாநாட்டில் விவாதிக்க உள்ளனர். இஎஸ்ஜி மற்றும் டிஜிட்டல் மோசடி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இஎஸ்ஜி என்று அழைக்கப்படும் சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகக் காரணிகள் நிறுவனத்தின் போக்கில் தாக்கம் செலுத்தக் கூடியவையாக உள்ளன. ஒரு நிறுவனத்தை மதிப்பீடு செய்யும் போது முதலீட்டாளர்கள் இஎஸ்ஜி காரணிகளையும் கருத்தில் கொள்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment