
புதுடெல்லி: மத்திய ரிசர்வ் வங்கி தங்கப் பத்திர விற்பனையை ஜூன் 20-ம் தேதி அன்று தொடங்கியுள்ளது. 24-ம் தேதியுடன் விற்பனை முடிவடைகிறது.
தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவர்கள் ஆபரணத்துக்கு மாற்றாக முதலீடு செய்யும் வாய்ப்பாக தங்கப் பத்திரங்களை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் சீரிஸ் தங்க பத்திரம் விற்பனை ஜூன் 20-ம் தேதி அன்று தொடங்கியது. இன்னும் 5 நாட்கள் இந்த பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். தபால் நிலையங்கள், மற்றும் அனைத்து துணை தபால் நிலையங்களிலும், வங்கிகளிலும் தங்க பத்திரங்கள் விற்பனை நடைபெறும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment