
புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொரு ஆண்டும் அவற்றின் கடன் வழங்கல் இலக்கை அதிகரிப்பது வழக்கம். இந்நிலையில், கடன் வழங்கலை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு ஃபின்டெக் நிறுவனங்களுடன் கூட்டணி வைப்பது குறித்து பரிசீலனை செய்ய லாம் என்று பொதுத் துறைவங்கிகளை மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஃபின்டெக் நிறுவனங்கள் வலுவான தொழில்நுட்பக் கட்ட மைப்பைக் கொண்டு மக்களை எளிதில் சென்றடைகின்றன. இதன்மூலம் வர்த்தகம் அதிகரிக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனங் களுடன் கூட்டணி வைத்தால், பொதுத்துறை வங்கிகளின் கடன்வழங்கல் அதிகரிக்கும் என்றும் அதன்மூலம் வங்கிகளின் வர்த்தகத்தை அதிகரிக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment