
புதுடெல்லி: சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு பாஸ்டேக் மூலம் கட்டண வருமானம் தினசரி ரூ.143 கோடியைத் தொட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இந்த அதிகபட்ச தொகை எட்டப்பட்டுள்ளது.
இதேபோல ரயில்வேயில் சரக்கு போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் 12.50 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுங்க கட்டண வசூல் அதிகரிப்பு மற்றும் ரயிலில் சரக்கு போக்குவரத்து அதிகரிப்பு ஆகியன மீண்டும் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பி வருவதன் அறிகுறிகள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment