
ஜனநாயகம், சமூக நல்லிணக்கம், வளம் இந்த மூன்றும்தான் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்திலும் உலக நாடுகள் வியந்து பார்க்கும் அடிப்படை பண்புகள். நம்மைப் போன்று காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்ற பல நாடுகள் இன்று ஜனநாயகத்தை தக்கவைக்க முடியாமல் தள்ளாட்டத்தில் உள்ளன. நமது அண்டை நாடான பாகிஸ்தானே இதற்கு உதாரணம். இன்றும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நாடாகவே அறியப்பட்டு வருகிறது பாகிஸ்தான்.ஆனால் இந்தியா அதற்கு நேரெதிர் மாறாக உள்ளது. மக்களாட்சி தத்துவத்துக்கு மிகச் சிறந்த உதாரணமாக போற்றப்படுவது இந்திய ஜனநாயகம் மட்டும்தான்.
பிரெஞ்சு நாவலாசிரியர் ஆன்ட்ரே மால்ரக்ஸ் கூறுவதைப் போல ‘‘அப்பழுக்கற்ற நமது விடுதலைப் போராட்ட வீரர், புனிதர்களால் இந்தியா வடிவமைக்கப்பட்டதால்தான் இந்தப் பெருமை. எகிப்தின் எதிர்காலத்தை இந்தியாவின் தற்போதைய மாதிரியைக் கொண்டு உருவாக்குவது குறித்து பேசுவதற்காக அரபு எழுச்சி இயக்கம் அழைத்தபோது அவர்கள் கேட்ட மூன்று கேள்விகள் இவைதான். ஒன்று எப்படி இந்திய ஜனநாயகம் ராணுவத்தின் பிடியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு உலக அரங்கில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை எப்படி இந்தியா தக்கவைத்துள்ளது. பல இனங்கள், மதங்கள் வாழும் இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை பேணிக்காப்பது எப்படி என்பதே மூன்றாவது கேள்வி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment