
புதுடெல்லி: திறந்தவெளி இ-காமர்ஸ் கட்டமைப்பான ஓஎன்டிசி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.இந்நிலையில், ஓஎன்டிசி அறிமுகத்துக்குப் பிறகு இ-காமர்ஸ் துறைமுற்றிலும் மாறிவிடும் என்று ஒஎன்டிசி-யின் தலைமை செயல்அதிகாரி டி.கோஷி தெரிவித்துள்ளார்.
“தற்போது இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் கட்டுமீறிய வளர்ச்சியை அடைந்துள்ளன. அந்தவகையில், ஓஎன்டிசி என்பது வளரும் நாடுகளுக்கு மட்டுல்ல வளர்ந்த நாடுகளுக்கும் தீர்வு வழங்கக்கூடியதாக அமையும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment