
இட்லி, தோசை மாவுக்கு அதிக தேவை உள்ள காரணத்தால் சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கோவையிலிருந்து அதிக அளவு வெட்கிரைண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக உள்நாட்டில் விற்பனை குறைந்துள்ளதாகவும் தொழில்துறையினர் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் வெட்கிரைண்டர்கள், உதிரிபாகங்கள், மூலப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் 600-க்கும் மேற்பட்டஎண்ணிக்கையில் உள்ளன. இவற்றின் மூலம் 30,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். நாடு முழுவதும் வெட்கிரைண்டர்கள் தேவையை கோவையை சேர்ந்த தொழில் நிறுவனங்கள்தான் பூர்த்தி செய்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment