
இந்திய ரயில்வேக்கு 120 `வந்தே பாரத்' ரயில்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம், ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு ரயில் தயாரிக்க ரூ.120 கோடி வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்களில் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ‘வந்தே பாரத்’ என்ற பெயரில் அதிநவீன வசதிகள் கொண்ட ரயில்களை இயக்க, இந்திய ரயில்வே முடிவுசெய்தது. இதன்படி, நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment