
புதுடெல்லி: வரும் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தார். அப்போது அவர் நிதிச் சட்டங்களில் 64 திருத்தங்களைக் கொண்ட ‘நிதி மசோதா 2023’ அறிமுகம் செய்தார். கடன் பரஸ்பர நிதித் திட்டங்கள் குறுகிய கால மூலதன ஆதாயமாக கருதப்படும் என்றும் அதற்கான வரிச் சலுகை ரத்து செய்யப்படும் என்றும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது போன்று 64 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இந்த நிதி மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
பரஸ்பர நிதித் திட்டங்களின்கீழ், நிறுவனப் பங்குகளில் 35 சதவீதத்துக்குக் கீழாக முதலீடு செய்யப்பட்டிருக்கும் கடன் நிதி திட்டங்களுக்கான வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. ராயல்டி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் வசூலிக்கும் தொழில்நுட்ப கட்டணங்கள் மீதான வரி 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடன் பத்திர பரிவர்த்தனை வரி 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment